அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அலுவலகத்தில் பிற துறை அலுவலர்கள் பணி புரிவதை ரத்து செய்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அலுவலகங்களில் ஒரு உதவி திட்ட அலுவலர் பணி இடங்கள் வெளி முகமை மூலமாக நிரப்பப்படுவதை கைவிட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டத்திற்கு முத்துக்குமார் மலர்க்கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் அரசு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் மாநில செயலாளர் ஷேக்தாவூத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் வட்டார தலைவர் சிவதாஸ் வட்டார செயலாளர் வெங்கடாசலம் வட்டார இணை செயலாளர் அமுதா மாவட்ட இணை செயலாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *