விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி, சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நடந்து கடந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ மைதானம் எதிரே கிழக்கு மேற்காக சக்தி விநாயகர் கோவில் தெரு அருகில் சாலையை நடந்து கடக்க முற்படும்போது அதே சாலையில் மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தெற்கு வடக்காக வந்த அடையாளம் பதிவெண் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு அவரின் இடது காலில் காயம் பட்டும் சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் படுக்க வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடம் சென்று பார்த்த போது காயம் பட்ட நபரை உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்கள்.
சிகிச்சையில் இருந்த பெயர் விலாசம் தெரியாத விபத்தில் சிக்கிய நபர் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கையில், பெயர், விலாசம் எதுவும் தெரியவில்லை. உள்நோயாளியாக விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பெயர் விலாசம் தெரியாத நபர் உடல், உடற்கூராய்வு செய்யப்பட்டது .
உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரவில்லை. அந்நிலையில் திருச்சி மாநகரம் போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு இரண்டாம் நிலை காவலர் சையது அபுதாஹிர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோக ஆசிரியர் விஜயகுமாருக்கு நல்லடக்கம் செய்ய தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சையது அபுதாஹிர் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார்.