C K RAJAN Cuddalore District Reporter
9488471235
கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
நேற்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 612 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி,மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.