திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று முன்தினம் 5- ம்நாள் 27- ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஜந்தாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் கீழச்சேத்தி தெய்வத்திரு ஜி.ராஜேந்திரன், வலங்கைமான் ஆர்.கலியமூர்த்தி மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நேற்று ஆறாம் நாள் 28- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ அம்மன் தவக்கோலத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆறாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் வலங்கைமான் கடைத்தெரு முத்து சைக்கிள் கம்பெனி எஸ்.மூர்த்தி& சன்ஸ் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.