டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பாரதி நாடக சபா உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, அமைத்த மகாத்மா காந்தி சிலை முன்பு சர்வதேச யோக தினம் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். டீசல் பணிமனை மேற்பார்வையாளர், ஆர்.நாகநாதன், டீசல் சீனியர் தொழில்நுட்பர் எம்.ராஜதுரை, அரிமா பழனி, மேனாள் ரயில்வே சுவாமிநாதன், முத்துகுமார் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் முன்னிலையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
2026 ஆண்டின் 12-வது சர்வதேச யோகா தினத்தின் முக்கியக் கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதாகும்.ஆரோக்கியமான முதுமைக்கு யோகா மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இது மூட்டு வலி, தசை இறுக்கம், சமநிலை இழப்பு போன்ற வயதான கால பிரச்சினைகளைத் தடுத்து, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.முதுமைக்கான பிரத்யேக யோகாசனங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. முதுமைக்கு ஏற்ற யோகாசனங்கள்வயது முதிர்ந்தவர்கள் அதிக சிரமமின்றி செய்யக்கூடிய சில எளிய ஆசனங்கள் உள்ளன. தாடாசனம் இது உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் கால்களை வலுப்படுத்துகிறது.பத்மாசனம் அல்லது சுகாசனம் தரையில் அமர்ந்து செய்யும் இந்த எளிய ஆசனங்கள் முதுகெலும்பை நேராக்கி, மன ஒருமுகப்பாட்டைத் தருகின்றன.
புஜங்காசனம் முதுகுவலியைக் குறைத்து, நெஞ்சுப் பகுதியை விரிவடையச் செய்வதால் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.சேதுபந்தாசனம் இடுப்பு மற்றும் முதுகுத் தண்டுவடத்தை நெகிழ்வாக வைத்திருக்க உதவுகிறது.சவாசனம் முழு உடலையும் மனதையும் தளர்த்தவும், ஆழ்ந்த ஓய்வுக்கும் இது உதவுகிறது.
மூச்சுப் பயிற்சிகள் (பிராணாயாமம்) மூச்சுக்குழாய் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் மேம்படுத்த பிராணாயாமம் மிகவும் அவசியம் ஆகும். நாடி சுத்தி பிராணயாமம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை சீராக வழங்கவும் உதவுகிறது.பிரமரி பிராணாயாமம் மன அழுத்தம், கவலை ஆகியவற்றைப் போக்கி, நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
யோகாவின் நன்மைகள் என எடுத்துக் கொண்டால் மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, மூட்டு வலியைக் குறைக்கிறது. நரம்பு மண்டலத்தைச் சீராக்கி, அமைதியான மனநிலையைத் தருகிறது.எனக்கூறி அஷ்டாங்க யோகா நூலை வழங்கினார்.