கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள பிரபல பவிழம் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் லிஜோ சுங்கத் அவர்களின் பிறந்தநாள் விழா கோவையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், நட்பின் இலக்கணமாகவும் நன்றி மறவாப் பண்போடும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் அவர்கள் நேரில் வருகை தந்து, பிறந்தநாள் காணும் தொழிலதிபர் லிஜோ சுங்கத் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த வருகை விழாவில் பங்கேற்றவர்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய நிலையில், இந்த தித்திப்பான நல்வாய்ப்பில் அமைச்சரை நேரில் சந்தித்து மகிழ்ந்தார்
கோவையின் பிரபல கலைஞர் யு.எம்.டி.ராஜா. விழாவின் ஒரு பகுதியாக, அமைச்சர் சம்பத் குமார் அவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நிகழ்வுகளைப் பார்வையிட்டார்; இந்த வேலை காண்கின்ற நிகழ்வை அமைச்சர், தொழிலதிபர் லிஜோ சுங்கத் மற்றும் கலைஞர் யு.எம்.டி.ராஜா ஆகியோர் இணைந்து முன்னின்று வழிநடத்தியதுடன், பரஸ்பரம் நலம் விசாரித்து தங்களின் நட்புப் பாராட்டுதலைப் பகிர்ந்து கொண்டனர். கோவையின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த பிறந்தநாள் விழா சந்திப்பு, நட்புக்கும் நன்றிக்கும் சான்றாக, பெரும் நெகிழ்வோடும் இனிமையோடும் நிறைவுற்றது.