திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர். துர்காமூர்த்தி,நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். அய்யனார் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் ரூ.13.88 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 5,313 பயனாளிகளுக்கு ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.