திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் 1926ம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று ஆங்கிலேயர்கள் கோடைக் காலத்திற்க்கு வருகை தரும் ஆங்கிலேயர்களுக்காக அவர்களது உதவியாளர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக கட்டபட்ட இம்மருத்துவ மனையில் ஆரம்ப காலத்தில் தொழுநோய்,உள் நோயாளி பிரிவுகளுடன் ஆரம்பிக்க பட்ட மருத்துவ மனையில், அறுவை சிகிச்சை பொது நலம், ஆய்வகம்,நுண் கதிர் பிரிவு , இரத்த வங்கி என 16 பிரிவுகள் கொண்ட மருத்துவ மனையில் பல இலட்சக்கணக்கான பிறப்புகளுக்கான தாய்சேய் நல பாதுகாப்பு பிரிவு,சிறப்பு மருத்துவர்களுடன் சித்த மருத்துவ பிரிவுகளுடன் இன்று நமக்காக ஆரம்பிக்கப்பட்டது
என பெருமையுடன் 100ஆண்டுகள் காணும் இம்மருந்து மனையின் தலைமை மருத்துவர்.பொண் ரதி,மகப்பேறு மருத்துவர். கார்த்திகா,நகர்நல மருத்துவர். அரவிந்த் மற்றும் மருத்துவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் செவிலியர்கள் என அனைவரையும் கௌரவித்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட நகர்மன்ற தலைவர் ப.செல்லத்துரை, துணை தலைவர். மாயகண்ணன், முன்னால் நகர் மன்ற தலைவர்.முகமது இப்ராகீம் மற்றும் முன்னால் தலைமை மருத்துவர்.பாலாஜி இவர்களுடன் த வெ க நகர்மன்ற செயலாளர். வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்த பேத்துபாறை மகேந்திரன்,சேக், அந்தோணி பெர்னாடோ மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.