திருவாரூர் நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில், ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 31.07.2026 நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோயில் முழுவதும் மங்கள இசை முழங்க, நூற்றுக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு, திருவிளக்குகளை ஏற்றி பக்தியுடன் வழிபட்டனர்.

இந்த சிறப்பு திருவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கந்தன் ஜுவல்லரி நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி பூஜையில் கலந்து கொள்ளும் வகையில் திருவிளக்குகள், பூஜைப் பொருட்கள், அமரும் வசதிகள் மற்றும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

பூஜையின் போது, அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் மற்றும் அம்மன் திருப்பாடல்கள் ஒலிக்க, பக்தர்கள் குடும்ப நலன், திருமண யோகம், குழந்தைப் பேறு, தொழில் முன்னேற்றம் மற்றும் உலக நன்மை வேண்டி மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.பூஜை நிறைவில், அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *