தூத்துக்குடி வளா்ச்சிக்கு கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கு நானும் உதவதயார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேச்சு
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்தின் 444 வது திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசாி பல்வேறு வகையில் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக உள்ள கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி பனிமயமாதா ஆலயத்திற்கு வருகை தந்தார். பேராலய பங்கு தந்தை ஜான்செல்வம், வரவேற்று சால்வை அணிவித்து பனிமயமாதா படம் நினைவு பாிசாக வழங்கினாா். முன்னதாக பனிமயமாதாவுக்கு ரோஜாப்பூ மாலை கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி வழங்கினாா். பின்னா் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டியபதி படத்திற்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம் பி. மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னா் பாண்டியபதி பரதநல சங்க தலைவர் இன்னாசி தலைமையில் பாண்டியபதி பரதர் நல சங்கத்தின் சார்பில் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேசுகையில் எனக்கும் மேயர் ஜெகன்பொியசாமிக்கும் உள்ள உறவு பன்னிரண்டு வருட உறவாகும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வசதிகளை மேயர் ஜெகன்பொியசாமி செய்து கொடுத்துள்ளார் அதுபோல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் மாவட்ட வளர்ச்சிக்கு உதவி வருகிறார் உங்களுக்கு மேலும் பல உதவிகள் தேவை என்றால் இருவருடன் இணைந்து நானும் உதவ தயாராகவே இருக்கிறேன். முன்பு ஒரு கை ஓசையாக இருந்தது இனி இருகை ஓசையாக இருக்கும் நாம் பிறந்த ஊர் கடற்கரை கிராமம் என்பது ஆயிரத்தி இருவது கிலோ மீட்டர் மண் நீளம் உள்ளது. கடற்கரை கிராமத்தில் மட்டும்தான் ஒரே மண்ணாக இருக்கும் நாம் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். வலம்புரி ஜான்க்கு எம்பி பதவி வழங்கியது திமுக தான் . 45 ஆண்டுகள் கழித்து மீண்டும் எனக்கு எம்பி பதவி வழங்கியது திமுக தான். பெரியார் ஒரு கொள்கை கொண்டவர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர் பெரியார் அந்த வழியில் வந்தது தான் திராவிடா் கழகம் திராவிட முன்னேற்ற கழகம். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பங்கு அதிகமாகவே இந்த மாவட்டத்திற்கு உள்ளது. எல்லோரும் இணைந்து தூத்துக்குடியில் ஒரு பகுதி வளர்ந்தால் அது தூத்துக்குடி வளர்ச்சி எல்லாப் பகுதியும் வளர்ந்தால் ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி என்று கருத வேண்டும் எப்போதும் உங்களுக்கு துணையாக நான் இருப்பேன் என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம் பி பேசினார்.
மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் எனது தந்தையார் காலத்தில் இருந்து இந்த உறவு தொடர்ந்து இருந்து வருகிறது குருஸ் பர்னாந்து சிலை அமைந்துள்ள இடம் உலகத்தில் எங்கு இருந்தாலும் கேட்டாலும் அது நினைவுக்கு வரும் திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். அதையேற்று எம்ஜிஆர் பூங்கா அருகில் மக்களுடன் முதல்வராக இருந்த எங்களது திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. குருஸ்பர்னாந்து சிலையை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் வரும் காலத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படிக்கட்டு சரியில்லை என்று கூறினார்கள் அதனை சரி செய்யப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது உங்களுடன் இணைந்து நான் பணியாற்ற எப்போதும் தயார் உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.
எம்.பி மேயருக்கு நினைவு பாிசுகள் வழங்கி ரோஜாப்பூ மாலைஅணிவித்து சங்கத்தின் சாா்பில் கௌரவித்தனா் பாண்டியபதி பரதநல சங்க செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் ஜான் , மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், மீனவரணி அமைப்பாளா் டேனியல், பகுதி செயலாளா் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மின்வாாிய தொழிற்சங்க தலைவா் பேச்சிமுத்து, தெற்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ாிக்கோ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, ராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் ஜுடூ, திருநெல்வேலி மாநகர செயலாளர் வக்கீல் தினேஷ், தொழிற்சங்க தலைவர் அகஸ்டின், விவசாய அணி துணை அமைப்பாளா் கண்ணன், பேராசிாியா் ஜெயந்தி மாலா, ரோசன், ஆா்தா் மச்சாது, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பா், உள்பட பலா் கலந்து கொண்டனா்.