சென்னை உயர் நீதிமன்றம் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடையிலும் இரண்டாவது முறையாக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏவை சந்தித்து நலம் விசாரித்தார் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.
இதற்கு முன்னர் ,கடந்த மாதம் ஜூலை 21ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்தார்.