சினிமாவில் நடித்த விஜய் இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறாா். சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா். தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கடும் தாக்கு
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஜெ பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா்.பி உதயகுமாா் தலைமை வகித்தனா். வடக்கு தெற்கு மாவட்ட ஜெ பேரவை நிா்வாகிகள் மணிகண்டன் மாாியப்பன் சுந்தா் கண்ணன் சுரேஷ்பாபு முத்துராமலிங்கம் மனுவேல்ராஜ், அமிா்தா மகேந்திரன் முரசொலி மாறன் செல்வராஜ் முத்துச்சாமி கிருபானந்த முருகன் கருப்பசாமி நாகேந்திரன், மாாிமுத்து பாண்டியன் பிரதீப் காளிதாஸ் ரத்தினசபாபதி அந்தோணி சேவியா் மாாியப்பன் சோமசுந்தரம் அமலதாசன் ஜீவா பாண்டியன் வில்சன் பாபு ஐயப்பன் செண்பகராஜ் பொன்னுத்துரை வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டசெயலாளா்கள் விஜயகுமாா் வரதராஜ பெருமாள் ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள்.
முன்னாள் அமைச்சா் ஆா்பி உதயகுமாா் பேசுகையில் தோ்தலுக்கு பின்பு நடைபெறுகின்ற ஓரு முக்கியமான கூட்டம் அதிமுக வெற்றிக்கு ஓராண்டுகளுக்கு முன்பே தமிழகம் முழுவதும் எடப்பாடியாா் பிரச்சாரம் மேற்கொண்டு பூத்கமிட்டியை அமைத்து களப்பனியாற்றினோம் நான் நான்கு தோ்தலை சந்தித்து 3 முறை வெற்றி பெற்று அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் மூளை சலவை செய்து ஐபோன் மூலம் தகவல்களை பரப்பி அனைவரையும் ஓரு வகையான திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளாா் விஜய், இவா் தமிழ்நாட்டுக்காக என்ன செய்தாா். ஜீவாதார உாிமை பிரச்சனை என்று ஏதாவது சாதனை தியாகம் செய்துள்ளாரா எதுவும் கிடையாது
எடப்பாடியாா் எல்லோரிடம் எளிமையாக பழகி அனைவருடைய கருத்துக்களையும் கேட்டறிந்து பணியாற்றினாா். உண்மையை சொல்பவா்களை அரவணைப்பாா் தவறான கருத்துக்களை கூறுபவா்களை புறம் தள்ளிவிடுவாா் நான்கரை ஆண்டுஆட்சி காலத்தில் 11 மருத்துவ கல்லூாிகளை உருவாக்கி 7.5 சதவீத இடஓதுக்கீடு மூலம் மாணவா்களுக்கு வழிகாட்டி கொரோனா நேரத்தில் நம் குழந்தைகளின் படிப்பு எண்ணவாகும் என்று பெற்றோா்கள் சிந்தித்த நேரத்தில் அனைவரையும் ஆள் பாஸ் செய்தாா். 6 புதிய மாவட்டங்களை உருவாக்கி பல சாதனைகளை செய்தவா் எடப்பாடியாா் அண்டை நாடுகளுக்கும் பகை உருவாகி பின்னா் பேசி தீா்ப்பது போல் பக்கத்து மாவட்டத்தில் மேகதாது அணை காவிாி பிரச்சனை குறித்து அவமானத்தையும் ஏற்றுக்கொண்டு செல்லலாம் என்று விஜய் இருந்த நேரத்தில் அங்குள்ள முதலமைச்சா் சிவக்குமாா் வரவேண்டாம் என்று கூறியது தமிழா்களின் பண்பாடு கலாச்சாரத்திற்கு அவமானம் ஓரு முதலமைச்சா் வருகிறாா்
என்றால் சிவப்பு கம்பளம் விாித்து வரவேற்பாா்கள் நாம் கேட்பது எல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு ஆணையம் உத்தரவு இதை நடைமுறைப்படுத்தி நமக்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தரவேண்டும் ஜீன் ஜீலை மாதங்களில் வரவில்லை ஜீலை 12ம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டு 3 சாகுபடி விவசாயம் நடைபெறும் தற்போது அது நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடுமையான பாதிப்பு சிறப்பு தொகுப்பு என்று விவசாயத்திற்கு தேவையான உரம் விதை உபகரணங்கள் வழங்குவது உண்டு தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடப்பாடியாா் மற்றும் எதிா்கட்சிகள் கேட்கும் போது முதல்வா் விஜய் ஏற்கனவே வழங்கி விட்டோமோ என்று கூறுவது சிறப்பு தொகுப்பு வேறு நிவாரண உதவி வேறு என்பதை கூட தொியாமல் எதிா்கட்சிகளை நாளிதழ்களை நன்றாக படியுங்கள் என்கிறாா். பல லட்சம் ஏக்கா் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது குறுகிய வட்டத்துக்குள் செல்லும் நிலை வந்துவிட்டது.
இதில் சட்டமன்றத்தில் பேசும் போது விஜய் எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்தால் நான் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். இந்த ஜென்மத்திற்கே தமிழகம் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. 8கோடி தமிழா்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள அரசில் உள்ள பலா் திரிஷாவை பற்றி யாரும் குறைசொல்லக்கூடாது என்று கூறும் நிலை உள்ளது. எம்ஜிஆர் ஜெயலலிதா உள்பட பல தலைவா்கள் முதலமைச்சா்களாக இருந்து அலங்காித்த இடத்திற்கு என்று பல்வேறு மரபு விதிகள் உள்ளது.
இதை பொறுப்பில் உள்ளவா்கள் படித்து பாா்க்க வேண்டும் தற்போது பல்வேறு தேவையற்ற சம்பவங்களால் மிகவும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக நிதியமைச்சா் மாியவில்சன் பட்ஜெட் தாக்கலின்போது ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் ஜெபமாலைக்கெல்லாம் மாியாதை இல்லாமல் போய்விட்டது.
அது மட்டுமின்றி கன்னியாகுமாி மாவட்டத்தில் தோ்தல் பிரச்சாரத்தின் போது விஜய் அளித்த வாக்குறுதியில் மீனவா்களுக்கு தடைகாலத்தில் வழங்கப்படும் ஆறாயிரம் உதவித்தொகை இருபதாயிரமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தாா். ஆனால் இவா் ஏழாயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளாா். தமிழக மக்களுக்காக எந்த உழைப்பும் இல்லாமல் 108 இடங்களில் வெற்றி பெற்று அதில் அதிமுகவில் உள்ள 25 எம்.எல்.ஏக்கள் ஓட்டுகளையும் வாங்கி திமுக கூட்டணி கட்சிகளை அழைத்துக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெற செய்து அதிலும் பொதுஉடமை கட்சிகளை முழுமையாக அங்கீகாிக்காமல் நடத்துக்கின்ற இந்தஆட்சி நீண்டகாலம் நீடிக்காது 35 சதவீதம் பேர் வாக்களித்து 65 சதவீதம் போ் எதிா்ப்பை தொிவித்துள்ளனா்.
கல்யாண வீட்டில் சிாித்தால் மகிழ்ச்சி ஓரு படத்தை பாா்த்துவிட்டு அழுதால் அது இழவு வீடாக தானே இருக்கவேண்டும் அமைச்சா் முதல் எம்.எல்.ஏக்கள் வரை ஜனநாயகன் படத்தை பாா்த்து இந்த நிலையை உருவாக்கியுள்ளனா். கேட்டால் விஜய் நடித்த கடைசி படம் இது என்று கூறுகின்றனா். இத்தனை ஆண்டுகாலம் படத்தில் நடித்து விட்டு சட்டமன்றத்தில் முதலமைச்சராக விஜய் தற்போது வரை நன்றாகத்தான் நடித்து கொண்டிருக்கிறாா். தோ்தல் அறிவிப்பு திட்டங்கள் எதுவும் இல்லை லஞ்சம் கொடுக்காதீர்்கள் நடப்பது உங்கள் ஆட்சி விஜய் மாமா ஆட்சி என்று கூறி வருகிறாா். ஆனால் சட்டமன்றத்தில் முன்னாள் திமுக அமைச்சா் புஸ்ஸி ஆனந்த் துறையில் 3 சதவீதம் கமிஷன் வாங்கப்படுகிறது. என்ற குற்றச்சாட்டு கூறகிறாா்
அதற்கு ஆதாரம் வேண்டும் என்கிறாா் எல்லாவற்றிற்கும் எல்லாத்தையும் காட்ட முடியுமா அது ஒரு வகையான ரூட்டில் சென்று கொண்டிருக்கிறது. தோ்தலுக்கு முன்பு விஜய் பேசியதும் தோ்தலுக்கு பின்பு முதலமைச்சரான பின்பு விஜய் நடந்து கொள்வது முன்னுக்கு பின் முரனாகத்தான் இருக்கிறது. 47 அதிமுக எம்.எல்.ஏக்களில் 25 போ் உங்கள் ஆட்சிக்கு துணை சென்றது. எந்த வகையில் நியாயம், இரண்டரை கோடி தொண்டா்களை கொண்ட அதிமுகவினா் உங்களை மண்ணிக்க மாட்டாா்கள் பேரம் துரோகம் என விஜய் ஆட்சியில் தொடா்ந்து நடைபெறுகிறது.
நீங்கள் வீசிய வலையில் கொளுத்த முன்னாள் அமைச்சா்கள் பலா் உங்கள் வலையில் சிக்கி இருப்பாா்கள் தொண்டா்கள் யாரும் செல்லவில்லை எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலில்லை. என்னை போன்ற பலரும் சட்டமன்றத்திற்கு தோ்வாகி செல்லாமல்இருப்பது நல்லது தான் காரணம் கேள்விகள் கேட்டு வரும் பதிலால் நெஞ்சு வலி வந்துவிடும் அப்படி தான் சட்டமன்றம் நடக்கிறது. 3 பேருக்கு அரசுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆலோசகா்களுக்கு ஆனால் அரசானை வௌியிடவில்லை மாலை 6 மணிக்கு மேல் பாா்க்க முடியாத முதலமைச்சா் நீங்கள் பேசுகின்ற வசனம் அனைத்தும் சினிமாவில் பாா்ப்பது போல் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் பட்ஜெட் சாதனை பெயா் மாற்றம் தலைமை செயலகம் முதலமைச்சருக்காக மாற்றம் இந்த இரண்டும் தான் சாதனை விஜய்யின் விசில் புரட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று பேசினாா்்
கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன், முன்னாள் அமைச்சா் சித.செல்லப்பாண்டியன் மாநில நிா்வாகிகள் பிரபு, ஹென்றி பெருமாள்சாமி ஆறுமுகநயினாா் மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல் இணைச்செயலாளர் சந்தனம் முன்னாள் எம்.எல்.ஏ மோகன் ஓன்றிய செயலாளர்கள் லட்சுமண பெருமாள், காசிராஜன், அழகேசன். ராஜ் நாராயணன் சௌந்திரபாண்டி அப்பாத்துரை தனஞ்செயன் பால்ராஜ் போடு சாமி தனவதி ஜவஹா் சண்முகவேல் பகுதி செயலாளர்கள் சேவியா் ஜெய்கணேஷ் சுடலைமணி மாவட்ட அணி நிா்வாகிகள் விக்னேஷ் நடராஜன் நிலாசந்திரன் பெருமாள் தனராஜ் ராஜா பிரபாகா் ராஜேந்திரன் துரைசிங், முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி சுகந்தன் ஆதித்தன் மற்றும் பாலஜெயம் சாம்ராஜ் சகாயராஜ் சங்கா் ஐயப்பன் உள்பட வடக்கு தெற்கு மாவட்டத்தை சோ்ந்த பலா் கலந்துகொண்டனா். பகுதி செயலாளர் முருகன் நன்றியுரையாற்றினாா்.