தூத்துக்குடி:
தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
அய்யனடைப்பு பகுதி கூறுகையில்,
அய்யனாடைப்பு அருகே சிப்காட் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் செல்லும் குடிநீர் குழாய் இருந்து வருகிறது, அந்த குழாயில் இருந்து ஒரு நல்லி (குழாய்) அமைத்து அப்பகுதி மக்களுக்கு தினசரி குறைந்தபட்சம் தலா 5 குடங்கள் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தற்போது அந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 25 மாற்றுத்திறனாளிகள் உட்பட முதியவர்கள் பெண்கள் வசித்து வருகின்றனர், மேலும் கூலி வேலை, ஹோட்டல் தொழில் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் குறைந்த வருமானத்தில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர்.
வசதி வாய்ப்பு இல்லாத இந்த மக்கள், குடிநீருக்காக ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் மினி பேருந்து வசதி போன்ற அடிப்படை தேவைகளும் போதுமானதாக இல்லை .
இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கடந்த ஒரு மாதமாக புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அய்யனடைப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதுடன், தெருவிளக்கு, சாலை மற்றும் மினி பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.