கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 பிறந்தநாள் விழா..
பேரறிஞர் அண்ணாவின் 118 பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான ம.சின்னசாமி முன்னிலையில்கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் மாவட்ட கழக செயலாளர் K.கமலக்கண்ணன் வெங்கமேட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா,எம்ஜிஆர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கழக கொடியை ஏற்றிவைத்து கழக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கருர் மாவட்ட 4 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கழக ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.