வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள்74-ஆம் ஆண்டு ஆடிப்பூர
குருபூசை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பைரவர் சித்தர்
இராமலிங்க சுவாமிகள்ஆலயம் உள்ளது.
இங்குவருடந்தோறும் ஆடிப்பூரகுருபூசை விழா நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்தாண்டுசுவாமிகளின் 74-ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூசை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.
காலை 8மணிக்கு சன்மார்க்க கொடியேற்றமும், காலை
11 மணிக்கு குருபூசை விழாவும், 11.30 மணிக்கு
மகாதீபாராதனையும்,அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்ன தானத்தை உண்டனர்.
விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி கிராமவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.