புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் வாணிதாசன்,கவிஞர் கண்ணதாசன் விழா நடந்தது.இதில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடிமத்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன் தாசு வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளர் அருள் செல்வம்,துணைச் செயலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 25 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்பட்டது. இதில் 57 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து வழங்கினார். இவ்விழாவில் வெற்றித் தமிழர் பேரவை கோவிந்தராசு சிறப்புரை நிகழ்த்தினார். பாவரங்கத்தில் கார்த்திகேயன், புதுவை கிருஷ்ணா, கிருஷ்ணம்மாள்,புவனேஸ்வரி ரகுராமன்வெற்றிச்செல்வி, திலகவதி ஆகியோர் கவிதை பாடினார்கள். நிகழ்ச்சியில் பாவனாவின் பரத நாட்டியம் நடைபெற்றது. ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அ.உசேன்,சுரேசுகுமார், .சிவேந்திரன், பாவலர் ஆனந்தராசன் மற்றும் தமிழறிஞர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழா முடிவில் இராசா நன்றி கூறினார்.