தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்போஸ்கோ (46), சமயபுரம் துணை மின்நிலைய தற்காலிக ஊழியர், வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டில் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது மனைவி அனிதா பள்ளிக்குச் சென்றிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து வந்த சமயபுரம் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.