நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு உலக தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக திருக்குறள் புத்தகத்தை அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி அரசு பள்ளி தலைமையாசிரிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
பசுமை மா. தில்லை சிவக்குமார்,பள்ளி கல்வி துணை ஆய்வாளர் கிருஷ்ணாமூர்த்தி , பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
உலக தமிழ் வளர்ச்சி மன்றம் அன்பளிப்பாக உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப . மகேஸ்வரி வழங்கினார்
உடன் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசுமை மா . தில்லை சிவக்குமார் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கு. மாணிக்கம், தொ. ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் து. ஜோதி மணி, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் க.நடராஜன், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெ . சுந்தரம், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி, மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.