இரா.மோகன்,தரங்கம்பாடி.செய்தியாளர்.

பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீ னத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த் தியும் அருள்பாலித்து வருகிறார்கள்.

சிவன், எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு திரளான பக்தர்கள் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள்.

மேலும், இங்கு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் செய் யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக் தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தந்தை வெங்கடேஷ்க்கு நேற்று  கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆயுள் விருத்திக்காக  ஹோமம் செய்து வழிபட்டார்.

தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ் வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவிலின் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *