தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூரில் நீட் தேர்விற்காக உயிர் நீத்த மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், தூயநெஞ்சக்கல்லூரி எதிரில் திருப்பத்தூர் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் நீட் தேர்விற்காக உயிர்நீத்த மாணவி அனிதாவின் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைபையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், நகரக் கழக செயலாளர் ராஜேந்திரன்,
அப்போது தேவராஜ் பேசுகையில் நீட்டிற்காக இதுவரை 32 மாணவ மாணவிகள் உயிர் நீத்துள்ளனர் என்றார் திமுக தோழமைக் கட்சிகள் நீட் தேர்வினால் உயிர் நீத்த மாணவர்கள் 32 குடும்பங்களுக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். என்றனர்இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர் இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் அணி மருத்துவர் அணி இளைஞரணி கூட்டாக தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் டி.சி. கார்த்தி, அருள்நிதி, கார்த்திக், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், கந்திலி ஒன்றிய செயலாளர்கள். குணசேகரன், அசோக் குமார், கந்திலி ஒன்றிய செயலாளர் பொறுப்பாளர், மோகன்ராஜ்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் மண்டல பொறுப்பாளர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ், ஒன்றிய செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.