தோக்காமூர் ஊராட்சியில் 90 நபர் களுக்கு இலவச வீட்டுமணை.

திருவள்ளூர்

தோக்கமூர் ஊராட்சியில் உள்ள 90 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வீட்டு
மனை பட்டா வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தோகாமூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள காலனிப் பகுதியில் சுமார் 90 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வ ர்யா ராமநாதன் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும் மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி ஜே கோவிந் தராஜன் பயனாளிகளுக்கு இல வச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சித்ரா, தோக்காமூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகி ருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, உறுப்பினர் ஷீலா கோவிந்தசாமி ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகள் நேரில் வந்து பெற்றுச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *