தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ.
தஞ்சாவூரில் 50 ஆண்டுகள் பழமையான மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம்.
மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சி வார்டு 33 வண்டிக்காரத் தெருவில் சீனிவாசன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிக்கட்டிடத்திற்கு புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டன. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் இந்த புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
இன்று அதன் திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி கட்டிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
பின்னர் புதிய பள்ளி கட்டிடத்தை அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பரணி, விக்னேஷ் ஆகியோரை கொண்டு மேயர் சண்.ராமநாதன் திறந்து வைக்க செய்தார்.
மாணவர்கள் கட்டிடத்தை திறந்ததும் அங்கு கூடியிருந்த அனைவரும் கைத்தட்டி மேயரின் செயலை பாராட்டினர். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி செயற்பொறியாளர் (பொறுப்பு ) ராஜசேகரன், மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா, கவுன்சிலர்கள் வனிதா செல்வகுமார், சுந்தரசெந்தில், தி.மு.க மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கமலா ரவி, பகுதி செயலாளர் கார்த்திக்கேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.