நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில்
புதுவை மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை வஸ்த்துக்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் !
செய்தியாளர். ச.முருகவேலு
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம்
புதுவை மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை வஸ்த்துக்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் கார்த்திகேசன் தலைமை தாங்கினார்.
பள்ளியின் துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், மாநில பொது ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெட்டப்பாக்கம் மருத்துவர் மணிமாறன், பல் மருத்துவர் ஹெலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிராமசேவக், சேவக், திட்டப்பணியாளர்கள். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பைச் சார்ந்த சமூக வல்லுநர்கள், கணக்காளர்கள், பள்ளி மாணவ,மாணவியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.