சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
தே.மு.தி.க தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு போச்சம்பள்ளி தே.மு.தி.க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் பகுதியில் தே.மு.தி.க தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலை உயிரிழந்ததையடுத்து போச்சம்பள்ளி தே.மு.தி.க நிர்வாகிகள் கருப்பு பேட்ச் அணித்து போச்சம்பள்ளி நான்கு முனை சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரையில் மௌன ஊர்வலமாக சென்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி அதன் வழியில் பசி என்று வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து அவர்களின் புன்னகையில் வாழ்ந்த மனிதர் எங்கள் கேப்டன் என்றும் தமிழ் சினிமாவில் எண்ணற்ற கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சென்றவர் கேப்டன் தொண்டர்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர்