அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில்
ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் இணைந்து நடத்திய ஐந்தாம் ஆண்டு திருவிழாக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் ஐயப்பன் மற்றும் முருகன் கோவில்களுக்கு மாலை அணிந்திருந்த பக்தர்களுக்கு பெண்கள் பாத பூஜை செய்தனர் தொடர்ந்து தாய் விளக்கு ஏற்றப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு பூஜை பொருட்களான மஞ்சள் குங்குமம் வளையல் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஆதனூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் செய்திருந்தனர்.