வலங்கைமான் பகுதியில் நாளை (ஒன்பதாம் தேதி) மின்தடை.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஒன்பதாம் தேதி (நாளை) மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர், கட்டுமானம் அருள்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஒன்பதாம் தேதி) நடைபெறுகிறது. இதனால் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை வலங்கைமான், ஆண்டாங்கோவில், கீழ விடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர் மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.