திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது வயது சிறுமி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை மிதமான மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் நேற்று இரவு 10 மணி மழை அளவு பதிவாகியுள்ளது

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் பகுதியை சேர்ந்த. ராஜசேகர் என்பவர் ஸ்ரீவாஞ்சியம் தமிழ்நாடு மின்சாரத் துறை அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறார் இவருக்கு மோகன்தாஸ் 11 வயது என்கிற மகனும் மோனிஷா ஒன்பது வயது என்கிற மகளும் உள்ளனர் மகன் மோகன்தாஸ் அச்சுதமங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே பள்ளியில் மகள் மோனிஷா நான்காம் வகுப்பு படித்து வருகிறார்

அவரது வீட்டில் மோகன்தாஸ் மற்றும் மோனிஷா இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் போது கன மழையின் காரணமாக சுவர் இடிந்து இருவரின் மீதும் விழுந்து மோனிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக தந்தை ராஜசேகர் இருவரையும் இருசக்கர வாகனத்தில் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்

இதனையடுத்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மோனிஷாவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து நன்னிலம் காவல் சரக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடலை வைக்கப்படுள்ளது மோகன்தாஸ் லேசான காயங்களுடன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *