மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகில் உள்ள அம்மா திடல் மகாத்மா காந்தி மைதானத்தில், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை யில், கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு துவங்கியது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீக் அகமது துவக்கவுரையாற்றினார். மேலும், கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் ரத்தினம், நஜ்மா பேகம் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.

கட்சியின் மாநில செயலாளர்கள் ஏ.கே.கரீம், ராஜா உசேன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையுரையாற்றினார்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், ஆசிய கத்தோலிக்க மன்றத் தலைவரும், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் பேராயருமான பேராயர் யுவான் அம்புரோஸ், இஸ்லாமிய ஆராய்ச்சி மைய நிறுவனர் மவ்லவி ஷாஹூல் ஹமிது ஜமாலி, ஈரோடு நூருல் இஸ்லாம் மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி முஹம்மது தையிப் தாவூதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் சத்தார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில தலைவர் மூவாற்றுப்புழா அஷ்ரப் பாகவி, கர்நாடகா மாநில தலைவர் அப்துல் மஜீத், எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, முகமது பாரூக் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும், இந்த மாநாட்டில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், செல்லூர்ராஜு, காமராஜ், ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி, அப்துல் ரஹீம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மாநாட்டின் மதுரை பிரகடனத்தை மாநில பொருளாளர் அமீர் ஹம்சா வாசித்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ரூதீன் நன்றி கூறினார்.

திரளானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை – சட்டரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்கு – தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழக துணை வேந்தர், டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தவர்களையும் நியமிக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். நலிவடைந்துவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.
சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது எனபது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *