அலங்காநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு ஒன்றிய செயலாளர் நியமனம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு ஒன்றிய செயலாளராக வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொ.ஜெயபாண்டி அவர்களை கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று மேலூரில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்துக்கு நேரில் சென்று மாவட்ட செயலாளர் சரவணன் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டி கைத்தறி ஆடை அணிவித்து தன்னை ஒன்றிய செயலாளராக பரிந்துரை செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்
தொடர்ந்து வெள்ளையம் பட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் சிறப்பு விருந்தினரும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான வழக்கறிஞர் கோடீஸ்வரன் முன்னிலையில் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பூத்து கமிட்டி அமைப்பது டிடிவி தினகரன் அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட சம்பந்தமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அலங்கை நகர செயலாளர் ராஜபிரபு, இணை செயலாளர் வேல்முருகன், மாணவரணி செயலாளர் பண்னைகுடிஅசோக், விவசாய பிரிவு செயலாளர் பிச்சை, பிரதிநிதி சுரேஷ், எம்ஜிஆர் மன்றம் ராஜா, வார்டு செயலாளர் மெடிக்கல் சுதந்திர பாண்டியன், சிறுபான்மை அணி செயலாளர் ரியாஸ்கான், ஆதனூர் கணேசன், கிளைச் செயலாளர் சண்முகம், ஊராட்சி செயலாளர்கள் ஆறுமுகம், கோடாங்கிபட்டி ராஜா, அம்மா பேரவை நீதி, கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.