வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 -வது ஆண்டு விழாவில் டாக்டர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஜெயந்தி 52 -வது ஆண்டு விழாவில், நேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்குசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஞான கான கோகில நாதஸ்வர, இசைவாணன், மெல்லிசை திலகம் வலங்கைமான் எஸ். ஏ. எஸ். சந்திரசேகரன், ஆலங்குடி ஏ. வி. என். பாலமுருகன் ஆகியோரின் நாதஸ்வரமும், நீடாமங்கலம் என். கே. கோவிந்தராஜன், திருநீலக்குடி டி. எஸ். சங்கர் ஆகியோரின் தவில் இசையோடு மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு இசை மேதை, கலைமாமணி, டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் அவர்களின் தவப்புதல்வர், இன்னிசை தென்றல், கலைமாமணி, பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம் குழுவினரின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடைபெற்ற விடையாற்றி விழாவில், திருமஞ்சன அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உபயதாரர்கள்,பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை வலங்கைமான் ஆஞ்சநேயர் தாசன் என். ராமச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.