புதுச்சேரி அகில இந்திய சமூக அமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள அசோக் நகர் பாரதிதாசன் வீதியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

இந்த சமத்துவ பொங்கல் விழா புதுச்சேரி பிரபல சமூக சேவகிகள் மகேஸ்வரி விஜயலட்சுமி காமாட்சி, பூங்குழலி ஆகியோர் ஏற்பாட்டில் காமாட்சி . பாரதிதாசன்தெருவில் உள்ள பொதுமக்களின் அவரவர் வீட்டு வாசலில் கோலங்கள் போட்டு கோலப்போட்டி நடைபெற்றது.

பின்னர் மாலையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினார்கள் அதனை தொடர்ந்து கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் சித்தானந்தம் கவிஞர் சரவணன், மங்கலட்சுமி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *