மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்.
விவசாயிகளை அதிமுக ஆட்சி காலத்தில் பாதுகாத்துருக்கிறது என்று அழுத்தமா சொல்ல முடியும் விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியிலும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை ஆனால் இன்று திமுக ஆட்சியை நினைத்து விவசாயிகள் வேதனை படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு .
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநளை ஒட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் தேரடியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று தெற்குவீதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது விவசாயிகளை அதிமுக பாதுகாக்கிறது என்று அழுத்தமா சொல்ல முடியும் விவசாயிகளுக்கு எடப்பாடியார் ஆட்சியில் , அம்மா ஆட்சியில் , புரட்சி தலைவர் ஆட்சியில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை ஆனால் விவசாயிகள் வேதனை படுகிறார்கள் . மேட்டுர் அணை 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திமுக ஆட்சியில் மீண்டும் மூடப்பட்டிருக்கிறது . இதற்கெல்லாம் முற்றுபுள்ளி எப்போது வரும் என மக்கள் எதிர் பார்த்தது கொண்டிருக்கிறார்கள் .
அந்த முற்று புள்ளிதான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ., புரட்சி தலைவி அம்மா , அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் அதற்காக அனைவரும் உழைக்கவேண்டும் என்றார் இதில் கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் , மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் , மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் , முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் டி.என்.பாஸ்கர் , பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிரணி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.