பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்..
300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வழுத்தூர் அலீப் மெட்ரிகுலேஷன் பள்ளியில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி மற்றும் வாஸன் கண் மருந்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கண்புரை, கண்நீர் அழுத்தநோய், கிட்டபார்வை, தூரபார்வை, கருவிழியில் புண் உள்பட கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.