டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் சார்பாக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தெ.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் சிவராமகிருஷ்ணன் மற்றும் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் துளசேந்திரன், ராஜராஜ சோழன், காலத்து கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள்

.தொல்லியல் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அதற்கான படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள் .முன்னதாக நிகழ்ச்சியின் வரவேற்பினை பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரன், வழங்க பயிலரங்க நோக்க உரையை உலக சாதனை நல்லாசிரியை சுலைகாபானு, ஆற்றினார்கள். நன்றியுரையை சேகர், அளிக்க விழா இனிதே நிறைவுற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *