தண்ணீரில் மீன்! கண்ணீரில் மீனவன்!
கவிஞர் ச.முருகவேல் நெட்டப்பாக்கம்
வாழ்க்கைக்காக தண்ணீரில் மீன்!
வாழ்வுக்காக கண்ணீரில் மீனவன்!
இருவருக்குமே இரண்டும் சொந்தம் தான்!
ஆனால் ஆளுவோர்க்கு பன்னீர் மட்டும் சொந்தம்!
எல்லை சொந்தமென்று எதிரி வரும்போது!
வில் கொண்ட ராமன் எங்கே போனான் !
இருந்ததை தாரை வார்த்தான் — இன்று இளைப்பாற இடமில்லை!
கரையேற துடிக்கும் அலைகளுக்கு கால் இருந்தால்!
டெல்லியில் போய் நின்று இருக்கும் நியாயம் கேட்டு!
ஆளுவோர்களின் அலட்சியம்!
மீனவன்
தேர்தலில் காட்டுவான் நிச்சயம்!