வலங்கைமான் அருகே ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு, கிளை செயலாளர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி தனியார் திருமண கூடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு, கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாதர் சம்மேளன ஒன்றிய செயலாளர் தேவிகா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ழஎஸ். எம். செந்தில்குமார் முன்னிலை வைத்தார், மாவட்ட செயலாளர் செல்வராஜ் வழிகாட்டுதலில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நல்லூர், ஊத்துக்காடு, கோவிந்தகுடி ஆகிய பகுதிகளில் மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்ன முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா, தலைவர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் ரவி, பொருளாளர் மருதையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *