பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் திமுக நகர கழக அலுவலகம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திராவிட கழகம் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில் மற்றும் தியாகபாரி, முன்னாள் எம்எல்ஏ அசோகன், திட்டகுழு உறுப்பினர் சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் சார்பணி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *