திருப்பனந்தாள் தி.மு.க. ஒன்றியம் சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு.

ஒன்றிய செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் திருப்பனந்தாள் தி.மு.க. ஒன்றியம் சார்பில் நடைப்பெற்றது.

இந்நிலையில் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி திருப்பனந்தாள் கடை வீதியில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோ.க. அண்ணாதுரை, மிசா மனோகரன், ரவி.உதயசந்திரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி பேரறிஞர் பெருந்தகை அண்ணா 55வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன், தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் பேரறிஞர் அண்ணா நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றை தொடர்ந்து பேணிக் காத்திடுவோம் என உறுதி அளித்தனர்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் சப்பாணி, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி ஷண்முகம், நிர்வாகி புகழேந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *