குடவாசல் கடைவீதியில் பூட்டி கிடக்கும் கழிவறையை திறக்காவிட்டால் போராட்டம் என சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதியில் உள்ள இலவச கழிவறையை 30 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் இயற்கை உபாதாயை கழிப்பதற்காக பயன்படுத்தி வரும் இலவச கழிப்பறை, தற்போது பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள், பொதுமக்கள் இதனால் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை சுட்டிக்காட்டி குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலரிடம் உடனே இலவச கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சிபிஎம் நகரக் குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஎம் நகர குழு சார்பாக மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என குடவாசல் சிபிஎம் நகரக் குழு செயலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *