தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலை பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி தலைமையில்
நடைப் பெற்றது.

பள்ளியின் துணை தலைமை ஆரியர் செந்தாமரை , முன்னாள் பேருராட்சி கவுன்சிலர் மோகன்லால்
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கந்தசாமி ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

முதுகலை தாவரவியல் ஆசிரியர்
மாரிச் செல்வம் வரவேற்புரை வழங்கினார் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆலங்குளம் சிறப்பு நிலை பேருராட்சி தலைவர் எம்.சுதா மோகன்லால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடந்த வருடம் 10, மற்றும் 12. வகுப்பு பள்ளியில் படித்து அதிக மதிபெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களும் பாரட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் இந்த ஆண்டு கல்வியிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாரட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரை வழங்கினார்.

அதனையெடுத்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைப்பெற்றது முடிவில் பட்டதாரி தமிழ் ஆசிரியர் ரவிக்குமார் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *