அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சியில் லெட்சுமணா மருத்துவமனை நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் லெட்சுமணன் மருத்துவமனையின் டாக்டர் பாலச்சந்தர், மற்றும் நிர்வாக இயக்குனர் சாந்தி, ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை கண்ணு காது மூக்கு தொண்டை சர்க்கரைநோய், முதுகு வலி, வயிறு சம்பந்தமான பிரச்சனை, பல்வலி சம்பந்தமான சிகிச்சை எலும்பு சம்பந்தமான சிகிச்சை உணவியல் நிபுணரின் ஆலோசனை பல்வலி சம்பந்தமான சிகிச்சை, விட்டமின் குறைபாடு தைராய்டு பிரச்சனை, பிரசவ காலத்தில் வரும் சர்க்கரை நோய், நீர்கட்டி துண்டுவட அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது. பரிசோதனை முடிவில் இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *