பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரில் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 ஐ சீர்குலைக்காதே, கியான்வாபி ஹல்த்வானி மஸ்ஜிதுகள் மீதான தொடரும் அநீதியை தடுத்து நிறுத்து மற்றும் மக்கள் மீதான உத்தரகாண்ட் காவல் துறையின் வன்முறையை தடுத்து நிறுத்தி ஆகிய பற்றி வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசு கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கூத்தாநல்லூர் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது ஜாஸ்மின் வரவேற்புரை ஆற்றினார்

இதில் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் திருவாரூர் மாவட்ட தலைவர் விலாயத் உசேன் மற்றும் அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்புவட்டத்தின் தலைவர் லூர்துசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்

மேலும் முன்னிலையில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா மாவட்ட செயலாளர் ஜெமீன் வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் அமீர் சுல்தான் விமன் இந்தியா மாவட்ட தலைவர் சையது பிவி மக்கள் அதிகாரம் தோழர் சண்முகசுந்தரம் மற்றும் கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள் ஆகியோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

இறுதியாக கூத்தாநல்லூர் நகர செயற்குழு உறுப்பினர் அப்துல்லா நன்றியுரை ஆற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *