இஸ்லாமியர்களை பயங்கர வாதிகளாக சித்தரித்து எடுக்க படும் திரை படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்தல் !
நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் வெளி வர இருக்கின்ற அமரன் என்கிற திரைப்படத்தை தமிழகத்தில் தடை விதிக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி லரும் அமரன் என்கிற திரைப்படத்தின் டீசர் காட்சியில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகவும் – தீவிர வாதிகளாகவும் சித்தரித்து எடுக்க பட்டதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
முஸ்லிம்கள் – கிறிஸ்துவர்கள் – இந்துக்கள் – ஆகிய முன்று சமுதாயத்தினரும் அண்னண் – தம்பியாகவும் – மாமன் – மச்சானகவும் ஒற்றுமையாக வாழும் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் தொடர்ந்து இது போன்று திரைப்படங்களை வெளியிடுவது மிகவும் கண்டிக்கதக்கது.
எனவே – இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து எடுக்க பட்ட அமரன் என்கிற திரை படத்திற்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும் இஸ்லாமியர்களை தவறாக சித்திரித்து திரை படங்களை எடுப்பதை கை விட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.