ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க முதல்வருக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகம் முழுவதும் வருகிற 12-03-2024 தேதி அன்று புனித ரமலான் மாதம் துவங்க உள்ளதால் அன்று முதல் இஸ்லாமியர்கள் 30 நாட்களும் விடிய காலை முதல் மாலை வரையிலும் நோன்பு வைத்து வருவார்கள் .
ஆகவே அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டால் நோன்பு வைத்திற்கும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமம் படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தடை இல்லா மின்சாரம் நோன்பு 30 நாட்களும் வழங்க வேண்டும் .மேலும் இஸ்லாமியர்கள் பகுதிகளில் இரவு நேரம் தேனீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
நோன்பு 30 நாட்களும் இரவு நேரம் மசூதிகளில் நடை பெறும் சிறப்பு தொழுகைக்கு இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் வருகின்றனர். ஆகவே இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களின் நலன் கருதி காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.