அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி அன்னதான விழா:
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சி ரெங்கசமுத்திரபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதி காலத்து ஶ்ரீ பெரியாண்டவர் கோயிலில் மகா சிவராத்திரியினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த விழா ஏற்பாடுகளை சங்கத்தின் மாவட்ட செயலாளர் மனோகரன் , சங்க பொறுப்பாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.