தென்காசியில் அமமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அமமுக சார்பில், தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவை சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தை அடியோடு சீர்குலைக்கும் தமிழக திமுக அரசை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் (தெற்கு) முருகையா பாண்டியன், (வடக்கு) ராமச்சந்திர மூர்த்தி (எ) வினோத் தலைமை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர்கள் இப்ராகீம் ஷா, ஹைதர்அலி, பொருளாளர் இசக்கிபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கற்பகம்ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சிவனுத்துரை ஆலங்குளம் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் மாநில சிறுபான்மை அணி அச்சன்புதூர் அயூப், நிர்வாகிகள் புலியூர் மாரியப்பன், பால கணேசன், பாலு, பால்ராஜ், பெரியதுரைசாமி, சண்முகவேல், கண்ணன், கோட்டைசாமி, சிவசுப்பிரமணியன், கண்ணம்மாள், கலாராணி, அருணகிரிசாமி, சுப்பிரமணியசாமி, பாலசுப்பிரமணியன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சிவனுத்துரை ஆலங்குளம் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தென்காசி நகர செயலாளர் வில்சன் நன்றி கூறினார்.