திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இரா. ஆனந்தி தலைமை வகித்தார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோ.சங்கீதா, துணைத் தலைவர் ஏ. ரேணுகா பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர், பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கோ. பாலசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் என்.எஸ். சுகந்தி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் த. ரவிச்சந்திரன் ஆகியோர் விழா பேருரை ஆற்றினார்கள். குச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் பெ. பழனிச்செல்வம் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், காலை உணவு திட்ட ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. மதிய உணவு திட்ட அமைப்பாளர் டி.சுபா அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்.