தேசிய நெடுஞ்சாலை துறையினால் வெட்டப்பட்டு இருந்த குழியில் போக்குவரத்துக் காவலர் இருசக்கர வாகனத்துடன் குழியில் விழுந்ததில் காவலருக்கு காயம் தனியார் மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் வெட்டப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று நசியனூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சேகர் என்பவர் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வந்து கொண்டு இருந்த போது தேசிய நெடுஞ்சாலை துறையினால் வெட்டப்பட்ட குழியில் விழுந்ததில் சேகருக்கு காயங்கள் ஏற்பட்டது
உடனடியாக அருகே இருந்தவர்கள் காவலரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர் மேலும் சேகர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் குழிக்குள் விழுந்ததில் இருசக்கர வாகனம் முழுமையாக சேதமானது இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் தேசிய நெடுஞ்சோலை துறையினர் பணிகளை மேற்கொள்ளாமல் அப்படியே விடுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருகை வெட்டப்பட்டுள்ள குழியல் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் உடனடியாக இப்ப பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்