அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையிலும் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர், இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியின் வடக்கு மாவட்ட இலக்கிய அணியின் செயலாளராகவும் இவரது மனைவி லெட்சுமி, அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராகவும் மற்றும்மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த நிர்வாகி சஞ்சய், ஆகியோர் பொறுப்புகளில் இருந்து வந்தனர்.. இந்த நிலையில் இவர்கள் மூவரும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைந்த அவர்களை அமைச்சர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.அருகில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மற்றும் நிர்வாகிகள் மேட்டூர்செல்வம், மகளிரணிதேன்மொழி, ராஜேஷ், உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *