தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி 100 வயதை கடந்து அதிக முறை வாக்களித்த வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பேசியதாவது,

தென்காசி மாவட்டத்தில் 100 வயதை கடந்து அதிக முறை வாக்களித்த 29 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் மாடசாமி, குழந்தைவேல், ஞானபாக்கியம் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

மற்ற 26 நபர்களை அந்தந்த சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று கெளரவிப்பார்கள். இந்நிகழ்ச்சிக்கு அமர்சேவா சங்கத்தின் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா ப்ரியதர்ஷினி முன்னிலை வகித்தார் முடிவில் அமர்சேவா சங்கத்தின் பொருளாளர் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியை மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்
வி. எம். சிவக்குமார் தொகுத்து வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கலைச்செல்வி, இ.சாமத்துரை, பிரபாகர், அமர்சேவா சங்க அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், அமர்சேவா சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *